states

img

ஆந்திரா: தொழிற்சாலை விபத்து - உயிரிழப்பு 17 ஆக உயர்வு

ஆந்திராவில் உள்ள மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவின் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள அச்சுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ரியாக்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.